search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடியக்கரை மீனவர் மரணம்"

    கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). மீனவர். இவர் இன்று காலை 5 மணி அளவில் மீன்பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்கு சென்றார்.

    அப்போது ஆடிகாற்றில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல், தாசில்தார் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான சக்தி வேலுக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், தேவிகா என்ற மகளும், அருணகிரி என்ற மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவ கோடிக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு மீனவாரிய ஊழியர்கள் சென்று மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×